search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீமுஷ்ணம் அருகே திருமணமான 1½ ஆண்டுகளில் இளம்பெண் மாயம்
    X

    ஸ்ரீமுஷ்ணம் அருகே திருமணமான 1½ ஆண்டுகளில் இளம்பெண் மாயம்

    ஸ்ரீமுஷ்ணம் அருகே திருமணமான 1½ ஆண்டுகளில் இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல்பாதிபாளையங் கோட்டையை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி ரம்யா( வயது 21). இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.

    கடந்த 6 மாதத்துக்கு முன்பு பிரபு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார். ரம்யா தனது மாமியாருடன் மேல்பாதி பாளையங்கோட்டையில் வசித்து வந்தார். இந்த நிலையில் ரம்யா தனது தாய் வீட்டுக்கு சென்று வருவதாக மாமியாரிடம் கூறிவிட்டு சென்றார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அவர் மாமியார் மற்றும் பெற்றோர் பல இடங்களில் ரம்யாவை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து ரம்யாவின் தாய் கலா சோழத்தரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து மாயமான ரம்யாவை தேடி வருகிறார். #tamilnews
    Next Story
    ×