search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆத்தூர்-ஆறுமுகநேரி போலீஸ் நிலையங்களில் முதன் முறையாக பெண் இன்ஸ்பெக்டர்கள் நியமனம்
    X

    ஆத்தூர்-ஆறுமுகநேரி போலீஸ் நிலையங்களில் முதன் முறையாக பெண் இன்ஸ்பெக்டர்கள் நியமனம்

    ஆத்தூர் மற்றும் ஆறுமுகநேரி போலீஸ் நிலையங்களுக்கு முதன்முறையாக பெண் இன்ஸ்பெக்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய விஜயகுமார் துணை போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று கோவை மாவட்டத்திற்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆத்தூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக மீனா என்பவர் பொறுப்பு ஏற்றுள்ளார்.

    இவர் இதற்கு முன்பு திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி பதவி உயர்வுடன் ஆத்தூருக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறுமுகநேரியில் புதிய இன்ஸ்பெக்டராக பத்திர காளி பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன்பு தென்காசி காவல் நிலையத் தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர்.

    ஆறுமுகநேரியில் ஏற்கனவே பணியாற்றிய இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் மேற்கு மண்டல சரகத்திற்கு மாறுதலாகி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஆத்தூர் மற்றும் ஆறுமுகநேரி போலீஸ் நிலையங்களுக்கு முதன்முறையாக பெண் இன்ஸ்பெக்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×