search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
    X

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். #chennairain #schoolholiday
    சென்னை:

    சென்னையில் நேற்று இரவில் இருந்து மழை பெய்து வருகிறது. இன்றிரவு கனமழை பெய்யும் என்று வானிமை மையம் அறிவித்துள்ளது. அத்துடன் மேலும் இரண்டு மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.

    இதனால் சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    இதேபோல் திருவாரூர், நாகை விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #chennairain #schoolholiday
    Next Story
    ×