search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போச்சம்பள்ளி தென்னந்தோப்பில் ஆபத்தான நிலையில் மின் கம்பம்
    X

    போச்சம்பள்ளி தென்னந்தோப்பில் ஆபத்தான நிலையில் மின் கம்பம்

    போச்சம்பள்ளி அருகே தென்னந்தோப்பில் ஆபத்தான நிலையில் இருக்கும் மின் கம்பத்தை அகற்ற கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ளது மஞ்சமேடு கிராமம். இந்த பகுதியில் அதிக அளவில் தென்னை மரங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியாகவும் உள்ளது. இந்த நிலையில் அரசம்பட்டி மின் வாரியத்தால் தென்னந்தோப்புகளுக்குள் பல மின் கம்பங்கள் நடப்பட்டு அதன் மூலம் விவசாய மோட்டார்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக முன்பு நாகலிங்கம்(50) விவசாயிக்கு செந்தமான தென்னந்தோப்பில் ஆபத்தான நிலையில் 2 மின் கம்பங்கள் உடைந்த நிலையில் உள்ளது.

    தற்பொது, மழை காலம் என்பதால் காற்று, மழை எந்த நேரத்திலும் வரும். தென்னை தோப்புக்குள் பல இடங்களில் விவசாயிகள் வீடுகட்டி குடியிருந்து வருகின்றனர்.இவர்கள் மின் கம்பங்களை கடந்துதான் செல்ல வேண்டும். இப்பகுதியில் உடைந்த ஒரு மின் கம்பத்தின் எர்த்து வயர் தென்னை மரத்தில் கட்டி விட்டு சென்றுள்ளனர். எர்த்து வயர்கள் எந்த நேரத்தில் அருந்து கிழே விழுமோ என்ற அச்சத்தில் செல்கின்றனர்.

    எனவே, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களை உடனடியாக அகற்றிவேரு கம்பங்கள் நடவேண்டும் என்றும், மின் கம்பத்தின் எர்த்து வயர்களை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என்றும் இந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    Next Story
    ×