search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புளியங்குடியில் கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பலி
    X

    புளியங்குடியில் கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பலி

    புளியங்குடியில் கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியங்குடி:

    புளியங்குடி அருகே உள்ள தலைவன் கோட்டை சர்ச் தெருவை சேர்ந்தவர் அய்யனார் (வயது 70). இவர் சம்பவத்தன்று ஊருக்கு அருகே உள்ள தனது தோப்பிற்கு சென்று அங்கு கீழே கிடந்த தேங்காய்களை சேகரித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக கால் தடுமாறி அருகிலிருந்த கிணற்றில் விழுந்துவிட்டார்

    அய்யனார் நீண்ட நேரமாக வராததால் அவரது மகன் சண்முகவேல் தனது தோப்பிற்கு சென்று பார்த்தபோது தந்தையின் செருப்பு கிணற்றின் அருகே கிடப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்து அவரை கிணற்றில் தேடியபோது அவர் கால்தடுமாறி கிணற்றில் விழுந்து இறந்து போனது தெரியவந்தது.

    இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×