என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காற்றழுத்தம் வலு இழக்க வாய்ப்பு - 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும்
Byமாலை மலர்21 Nov 2018 5:35 AM GMT (Updated: 21 Nov 2018 5:35 AM GMT)
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு இழக்க வாய்ப்பு இருப்பதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #WeatherResearchCenter #Rain
சென்னை:
தென் மேற்கு வங்ககடலில் தமிழக கடலோர பகுதியில் நிலை கொண்டு இருந்த வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
அது தாழ்வு மண்டலமாகவே தமிழக கடலோர மாவட்டங்கள் வழியாக கடந்து உள் மாவட்டங்களுக்கு செல்லும்.
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், புதுவை, காரைக்காலிலும் உள்மாவட்டங்களிலும், அடுத்த 24 மணி நேரத்துக்கு பரவலாக மழை பெய்யும். ஒரு சில இடங்களில் பலத்த மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு வங்ககடல், மன்னார்வளைகுடா மற்றும் தமிழக கடற்கரை பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும் அதிக பட்சம் 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக் கூடும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே இந்தப் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிகப்பட்டுள்ளனர்.
சென்னையில் நேற்று பிற்பகல் முதல் விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. 2-வது நாளாக இன்றும் மழை நீடித்தது. இதனால் இன்று சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இன்று பொது விடுமுறையாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு இழக்க வாய்ப்பு இருப்பதால் நாளை (22-ந்தேதி) முதல் 25-ந்தேதிவரை இந்திய வானிலை மையம் சார்பில் மழை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. #WeatherResearchCenter #Rain
தென் மேற்கு வங்ககடலில் தமிழக கடலோர பகுதியில் நிலை கொண்டு இருந்த வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
அது தாழ்வு மண்டலமாகவே தமிழக கடலோர மாவட்டங்கள் வழியாக கடந்து உள் மாவட்டங்களுக்கு செல்லும்.
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், புதுவை, காரைக்காலிலும் உள்மாவட்டங்களிலும், அடுத்த 24 மணி நேரத்துக்கு பரவலாக மழை பெய்யும். ஒரு சில இடங்களில் பலத்த மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு வங்ககடல், மன்னார்வளைகுடா மற்றும் தமிழக கடற்கரை பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும் அதிக பட்சம் 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக் கூடும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே இந்தப் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிகப்பட்டுள்ளனர்.
உள்தமிழகத்தில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ., வேகத்திலும் அதிக பட்சம் 50 கி.மீ. வேகத்திலும் காற்று வீசும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று பிற்பகல் முதல் விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. 2-வது நாளாக இன்றும் மழை நீடித்தது. இதனால் இன்று சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இன்று பொது விடுமுறையாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு இழக்க வாய்ப்பு இருப்பதால் நாளை (22-ந்தேதி) முதல் 25-ந்தேதிவரை இந்திய வானிலை மையம் சார்பில் மழை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. #WeatherResearchCenter #Rain
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X