என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் அருகே கார் கவிழ்ந்து கணவன் கண் முன் மனைவி பலி
Byமாலை மலர்20 Nov 2018 11:24 AM GMT (Updated: 20 Nov 2018 11:24 AM GMT)
திண்டுக்கல் அருகே கார் தலைக்குப்புற கவிழ்ந்து மனைவி பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாடிக்கொம்பு:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது59). இவரது மனைவி கிருஷ்ணவேணி (49). இவர்கள் 2 பேரும் ஒரு காரில் விருதுநகரில் நடைபெறும் தங்களது உறவினர் வீட்டு விஷேசத்தில் கலந்து கொள்வதற்காக வந்துகொண்டிருந்தனர்.
காரை கணேசன் ஓட்டி வந்தார். திண்டுக்கல் அருகில் உள்ள அகரம் பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக கார் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதில் கணவன்-மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர். தாடிக்கொம்பு இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். ஆனால் வரும் வழியிலேயே கிருஷ்ணவேணி பரிதாபமாக உயிரிழந்தார். தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X