search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாலிபரை கம்பியால் அடித்து கொல்ல முயற்சி- 2 பேர் கைது
    X

    வாலிபரை கம்பியால் அடித்து கொல்ல முயற்சி- 2 பேர் கைது

    களியக்காவிளை அருகே தங்களுக்கு எதிராக சாட்சி கூறக்கூடாது என வாலிபரை கம்பியால் அடித்து கொல்ல முயற்சி செய்த சம்பவம் குறித்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    களியக்காவிளை அடுத்த அயக்கோடுவிளை பகுதியை சேர்ந்தவர் எட்வின்ராஜ் (வயது 35).

    இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் அவரது அண்ணன் பெனட் டிக்ராஜ் என்பவருடன் வந்து கொண்டிருந்தார். களியக்காவிளையை அடுத்து ஒற்றா மரம் அருகே வரும்போது அவர்களை 2 பேர் வழி மறித்து தகராறில் ஈடுபட்டனர். மேலும் எங்களுக்கு எதிராக சாட்சி கூறக்கூடாது என மிரட்டினர்.

    இதில் அவர்களுக்குள் தகராறு முற்றியது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கம்பியால் எட்வின்ராஜை சரமாரி தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேலும் மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தினர்.

    இதுகுறித்து களியக்காவிளை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சொர்ண லதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் எட்வின்ராஜை கம்பியால் தாக்கியது அதே பகுதியை சேர்ந்த ஜெயன் (30), சஜின் (30) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். #tamilnews
    Next Story
    ×