என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காதலிக்க மறுத்த மாணவி மீது ஆசிட் வீசுவதாக மிரட்டல்- வாலிபர் மீது போலீசார் வழக்கு
Byமாலை மலர்20 Nov 2018 11:01 AM GMT (Updated: 20 Nov 2018 11:01 AM GMT)
ஈத்தாமொழி அருகே காதலிக்க மறுத்த மாணவி மீது ஆசிட் வீசுவதாக மிரட்டிய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாகர்கோவில்:
ஈத்தாமொழியை அடுத்த புதூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் சுண்டபற்றிவிளை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார்.
மாணவி பள்ளிக்குச் செல்லும் வழியில் வாலிபர் ஒருவர் அவரை தினமும் பின் தொடர்ந்தார். மாணவியை காதலிப்பதாகவும் கூறினார்.
வாலிபரின் காதலை மாணவி ஏற்க மறுத்தார். மேலும் இது பற்றி பெற்றோரிடமும் கூறினார்.
இதை அறிந்த வாலிபர் சம்பவத்தன்று பள்ளிக்குச் சென்ற மாணவியை வழிமறித்தார். தன்னை காதலிக்கவில்லை என்றால் ஆசிட் வீசுவேன் என்று மிரட்டினார்.
இதைக்கேட்டு பயந்துபோன மாணவி, வாலிபரின் தொல்லை குறித்து பெற்றோரிடம் கூறி அழுதார். பள்ளிக்குச் செல்லவும் மறுத்தார்.
வாலிபரின் தொல்லை அத்துமீறியதைத் தொடர்ந்து மாணவியின் தந்தை ஈத்தாமொழி போலீசில் புகார் செய்தார். அதில் ஈத்தாமொழியை அடுத்த நெடுவிளையைச் சேர்ந்த வாலிபர் தபின் (வயது21) என்பவர் தனது மகளை பின் தொடர்ந்து தொல்லை செய்து வருகிறார். தன்னை காதலிக்காவிட்டால் ஆசிட் வீசுவேன் என்று மிரட்டுகிறார். கத்தியால் குத்தி கொன்று விடுவேன் என்று கூறியதோடு, தகாத வார்த்தைகளும் பேசுகிறார். போலீசார் அவரை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறி இருந்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகன் விசாரணை நடத்தி மாணவிக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் தபின் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார். #tamilnews
ஈத்தாமொழியை அடுத்த புதூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் சுண்டபற்றிவிளை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார்.
மாணவி பள்ளிக்குச் செல்லும் வழியில் வாலிபர் ஒருவர் அவரை தினமும் பின் தொடர்ந்தார். மாணவியை காதலிப்பதாகவும் கூறினார்.
வாலிபரின் காதலை மாணவி ஏற்க மறுத்தார். மேலும் இது பற்றி பெற்றோரிடமும் கூறினார்.
இதை அறிந்த வாலிபர் சம்பவத்தன்று பள்ளிக்குச் சென்ற மாணவியை வழிமறித்தார். தன்னை காதலிக்கவில்லை என்றால் ஆசிட் வீசுவேன் என்று மிரட்டினார்.
இதைக்கேட்டு பயந்துபோன மாணவி, வாலிபரின் தொல்லை குறித்து பெற்றோரிடம் கூறி அழுதார். பள்ளிக்குச் செல்லவும் மறுத்தார்.
வாலிபரின் தொல்லை அத்துமீறியதைத் தொடர்ந்து மாணவியின் தந்தை ஈத்தாமொழி போலீசில் புகார் செய்தார். அதில் ஈத்தாமொழியை அடுத்த நெடுவிளையைச் சேர்ந்த வாலிபர் தபின் (வயது21) என்பவர் தனது மகளை பின் தொடர்ந்து தொல்லை செய்து வருகிறார். தன்னை காதலிக்காவிட்டால் ஆசிட் வீசுவேன் என்று மிரட்டுகிறார். கத்தியால் குத்தி கொன்று விடுவேன் என்று கூறியதோடு, தகாத வார்த்தைகளும் பேசுகிறார். போலீசார் அவரை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறி இருந்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகன் விசாரணை நடத்தி மாணவிக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் தபின் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X