என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொளத்தூரில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு - பொதுமக்கள் மறியல்
Byமாலை மலர்20 Nov 2018 9:21 AM GMT (Updated: 20 Nov 2018 9:21 AM GMT)
கொளத்தூரில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். #Tasmac
மாதவரம்:
கொளத்தூர், விவேக் நகர் பகுதியில் புதிதாக மதுக்கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
குடியிருப்பு பகுதியில் திறக்கப்படும் இந்த மதுக்கடைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் நாளை மறுநாள் மதுக்கடையை திறக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் இன்று காலை பெரம்பூர்-செங்குன்றம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் மற்றும் டாஸ்மாக் மேலாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த இடத்தில் மதுக்கடை திறக்கப்படாது என்று உறுதி அளித்தனர்.
இதையடுத்து பொது மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #Tasmac
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X