என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அடுத்த பிரதமர் யார்? - தமிழகத்தில் தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பு முடிவு
Byமாலை மலர்20 Nov 2018 5:14 AM GMT (Updated: 20 Nov 2018 5:14 AM GMT)
மத்தியில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற கருத்து கணிப்பை தந்தி தொலைக்காட்சி தமிழகத்தில் நடத்தியது. அதன் முடிவுகள் வெளியாகி உள்ளன. #ThanthiTV #ThanthiTvopinionPoll
சென்னை:
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாரதிய ஜனதா கட்சி தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
ஆனால் பா.ஜ.க.விடம் இருந்து ஆட்சியை பறிக்க காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு வியூகங்களை வகுத்து இப்போதே பிரசாரத்தை தொடங்கி விட்டார்கள். இதனால் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.- காங்கிரஸ் இடையே நேரடி பலப்பரீட்சை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் மத்தியில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற கருத்து கணிப்பை தந்தி தொலைக்காட்சி தமிழகத்தில் நடத்தியது. அதன் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமா? என்று கருத்து கணிப்பில் கேட்கப்பட்டது. அதற்கு ஆட்சி மாற்றம் வேண்டும் என்று 71 சதவீதம் பேர் கூறி உள்ளனர்.
அடுத்த பிரதமராக யார் வரவேண்டும்? என்ற கேள்விக்கு 19 சதவீதம் பேர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடுத்த பிரதமர் ஆக வேண்டும் என்று 36 சதவீதம் பேர் கூறி உள்ளனர்.
ஆனால் மோடி-ராகுல் இருவரும் வேண்டாம் என்று பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள். 3-வது நபர் ஒருவர் பிரதமர் ஆக வேண்டும் என்று 45 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க.-அ.ம.மு.க. இணையுமா? என்ற கேள்விக்கு இணையும் என்று 25 சதவீதம் பேரும், இணையாது என்று 45 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். பின்னர் இணையலாம் என்று 30 சதவீதம் பேர் கருத்து கூறி உள்ளனர். #ThanthiTV #ThanthiTvopinionPoll
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாரதிய ஜனதா கட்சி தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
ஆனால் பா.ஜ.க.விடம் இருந்து ஆட்சியை பறிக்க காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு வியூகங்களை வகுத்து இப்போதே பிரசாரத்தை தொடங்கி விட்டார்கள். இதனால் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.- காங்கிரஸ் இடையே நேரடி பலப்பரீட்சை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் மத்தியில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற கருத்து கணிப்பை தந்தி தொலைக்காட்சி தமிழகத்தில் நடத்தியது. அதன் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமா? என்று கருத்து கணிப்பில் கேட்கப்பட்டது. அதற்கு ஆட்சி மாற்றம் வேண்டும் என்று 71 சதவீதம் பேர் கூறி உள்ளனர்.
ஆட்சி மாற்றம் வேண்டாம் என்று 13 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். 16 சதவீதம் பேர் தேர்தல் வரும்போது முடிவு செய்து கொள்ளலாம் என்ற மனநிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது.
ஆனால் மோடி-ராகுல் இருவரும் வேண்டாம் என்று பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள். 3-வது நபர் ஒருவர் பிரதமர் ஆக வேண்டும் என்று 45 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க.-அ.ம.மு.க. இணையுமா? என்ற கேள்விக்கு இணையும் என்று 25 சதவீதம் பேரும், இணையாது என்று 45 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். பின்னர் இணையலாம் என்று 30 சதவீதம் பேர் கருத்து கூறி உள்ளனர். #ThanthiTV #ThanthiTvopinionPoll
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X