என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகங்கையில் தேசிய நூலக வார விழா
Byமாலை மலர்19 Nov 2018 5:50 PM GMT (Updated: 19 Nov 2018 5:50 PM GMT)
சிவகங்கை மாவட்ட மைய நூலகத்திலும், திருப்பத்தூர் கிளை நூலகத்திலும் தேசிய நூலக வார விழா நடைபெற்றது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் பேரறிஞர் அண்ணா கிளை நூலகத்தில் தேசிய நூலக வாரவிழா, நல்நூலகருக்குப் பாராட்டு விழா, பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. மாவட்ட நூலக ஆய்வாளர் ஜான்சாமுவேல் தலைமை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். முன்னதாக கிளை நூலகர் மகாலிங்கஜெயகாந்தன் அனைவரையும் வரவேற்றார். இந்த ஆண்டின் நல்நூலகர் விருது பெற்ற புலிக்கண்மாய் நூலகர் ஜெயஜோதி பாராட்டப்பட்டார். தொடர்ந்து விழாவையொட்டி பட்டிமன்ற பேச்சாளர் வைகை பாரதி, கவிஞர் சுகன்யா, புரவலர்கள் கணபதி, சிவசக்திகுமார், நேருயுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் ஆகியோர் நூலகத்தின் பயன்கள் மற்றும் நூலகத்தினால் உயர்ந்த எழுத்தாளர்கள் மற்றும் சான்றோர்களைப்பற்றி பேசினர்.
தொடர்ந்து கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் சவுந்தர்யா, சிந்தாமணி, சம்யுக்தா, ஜெயபிரதீபா, யுவஸ்ரீ, தேவயானி ஆகியோருக்குச் சான்றிதழ்களும், கேடயமும் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை நூலக உதவியாளர்கள் குணசேகரன், நாராயணன், கலைஞானம், கலைவாணன் ஆகியோர் செய்திருந்தனர். விழா முடிவில் திருக்கோஷ்டியூர் நூலகர் தமிழரசி நன்றி கூறினார்.
சிவகங்கையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் தேசிய நூலக வார விழா மாவட்ட நூலக அலுவலர் ரமணி புனிதகுமாரி தலைமையில் நடைபெற்றது. நூல் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் வெள்ளைச்சாமி கண்ணன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் ஆகஸ்போர்டு பள்ளி தாளாளர் சியாமளா வெங்கடேசன் நூலக வாசகர் வட்ட தலைவர் அன்புத்துரை, நவுஷாத், அனந்தராமன், தமிழ்கனல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் இரண்டாம் நிலை நூலகர் முத்துக்குமார் நன்றி கூறினார்.
திருப்பத்தூர் பேரறிஞர் அண்ணா கிளை நூலகத்தில் தேசிய நூலக வாரவிழா, நல்நூலகருக்குப் பாராட்டு விழா, பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. மாவட்ட நூலக ஆய்வாளர் ஜான்சாமுவேல் தலைமை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். முன்னதாக கிளை நூலகர் மகாலிங்கஜெயகாந்தன் அனைவரையும் வரவேற்றார். இந்த ஆண்டின் நல்நூலகர் விருது பெற்ற புலிக்கண்மாய் நூலகர் ஜெயஜோதி பாராட்டப்பட்டார். தொடர்ந்து விழாவையொட்டி பட்டிமன்ற பேச்சாளர் வைகை பாரதி, கவிஞர் சுகன்யா, புரவலர்கள் கணபதி, சிவசக்திகுமார், நேருயுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் ஆகியோர் நூலகத்தின் பயன்கள் மற்றும் நூலகத்தினால் உயர்ந்த எழுத்தாளர்கள் மற்றும் சான்றோர்களைப்பற்றி பேசினர்.
தொடர்ந்து கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் சவுந்தர்யா, சிந்தாமணி, சம்யுக்தா, ஜெயபிரதீபா, யுவஸ்ரீ, தேவயானி ஆகியோருக்குச் சான்றிதழ்களும், கேடயமும் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை நூலக உதவியாளர்கள் குணசேகரன், நாராயணன், கலைஞானம், கலைவாணன் ஆகியோர் செய்திருந்தனர். விழா முடிவில் திருக்கோஷ்டியூர் நூலகர் தமிழரசி நன்றி கூறினார்.
சிவகங்கையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் தேசிய நூலக வார விழா மாவட்ட நூலக அலுவலர் ரமணி புனிதகுமாரி தலைமையில் நடைபெற்றது. நூல் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் வெள்ளைச்சாமி கண்ணன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் ஆகஸ்போர்டு பள்ளி தாளாளர் சியாமளா வெங்கடேசன் நூலக வாசகர் வட்ட தலைவர் அன்புத்துரை, நவுஷாத், அனந்தராமன், தமிழ்கனல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் இரண்டாம் நிலை நூலகர் முத்துக்குமார் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X