search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாலாப்பேட்டை சுடுகாட்டில் மயங்கி விழுந்த முதியவர் மரணம்
    X

    லாலாப்பேட்டை சுடுகாட்டில் மயங்கி விழுந்த முதியவர் மரணம்

    லாலாப்பேட்டை சுடுகாட்டில் மயங்கி விழுந்த முதியவர் இறந்து கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    லாலாப்பேட்டை:

    திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் லாலாப்பேட்டையில் சுடுகாடு உள்ளது. இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

    இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

    இது குறித்து லாலாப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்தனர். இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? இங்கு எதற்காக வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×