search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாசரேத்தில் மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் கைது
    X

    நாசரேத்தில் மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் கைது

    நாசரேத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாட்டு வண்டியில் மணல் கடத்தியவரை கைது செய்தனர்.
    நாசரேத்:

    நாசரேத் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று வாழையடி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் இருந்து மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியை சோதனை நடத்தினர். 

    சோதனையில் மாட்டு வண்டியை ஓட்டி வந்தவர் நாசரேத் கொர்நேலியஸ் தெருவைச் சேர்ந்த அந்தோணிராஜ் மகன் ஆகாஷ் (27) என்பதும் அவர் அப்பகுதியில் ஓடை மணலை வண்டியில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. பின்னர் போலீசார் வாலிபர் ஆகாஷை கைது செய்தனர். மாட்டு வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×