search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆம்பூரில் சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் கைது
    X

    ஆம்பூரில் சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் கைது

    ஆம்பூரில் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் மாராபட்டு பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி இவர் வடச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் சிறுமியை கண்டு பிடிக்க முடியவில்லை.

    சிறுமியின் பெற்றோர் வாணியம்பாடி சம்பந்திகுப்பம் பகுதியை சேர்ந்த கெங்கையன் மகன் விக்ரமன் (வயது 22). என்பவர் எனது மகளை கதாலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று இருக்கலாம் என்று ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சிறுமியை தேடி வந்த நிலையில் நேற்று ஆம்பூர் ரெயில் நிலையத்தில் சிறுமி இருப்பதாக தகவல் கிடைத்து. 

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டு விக்ரமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இதேபோல் பேரணாம்பட்டு அருகே உள்ள பாலூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (24) என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.

    இது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இருவரும் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி வீட்டை விட்டு சென்று திருமணம் செய்து கொண்டனர்.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாசை கைது செய்து சிறுமிக்கு அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×