search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் போலீசார் ஹெல்மெட் சோதனை- 767 பேர் மீது வழக்கு
    X

    குமரி மாவட்டத்தில் போலீசார் ஹெல்மெட் சோதனை- 767 பேர் மீது வழக்கு

    குமரி மாவட்டத்தில் போலீசார் நடத்திய சோதனையில் ஹெல்மெட், ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டிவந்ததாக 118 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு இருந்தார்.

    அதன்படி நேற்று நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி ஆகிய சப் டிவி‌ஷன்களில் போலீசார் விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். நாகர்கோவிலில் நடந்த சோதனையில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்ததாக 118 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் ஆவணங்கள் மற்றும் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 10 பேர் மீதும் வழக்குபதிவு செய்து அபராத தொகை விதித்தனர்.

    தக்கலையில் நடந்த சோதனையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 128 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். முறையான ஆவணம் இன்றி வாகனம் ஓட்டி வந்ததாக 31 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    குளச்சல் பகுதியில் நடந்த வாகன சோதனையில் ஹெல்மெட், ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டிவந்ததாக 179 பேர் மீதும், கன்னியாகுமரியில் நடந்த சோதனையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகவும், ஹெல்மெட் அணியாமல் வந்ததாக 301 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் அவர்களுக்கு அபராத தொகையும் விதித்தனர். நேற்று மாவட்டம் முழுவதும் நடந்த இந்த தொடர் சோதனையில் மொத்தம் 767 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சோதனை இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. மாவட்டத்தில் முக்கிய சந்திப்பு பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×