search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
    X

    தேனி அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

    தேனி அருகே மணல் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தேனி:

    தேனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மணல் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயம் மட்டுமல்லாது குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் மணல் கடத்தலை தடுக்க முடியவில்லை. போடி தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் பெருமாள் கவுண்டன்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கரட்டுப்பட்டியில் இருந்து வேகமாக டிராக்டர் ஒன்று வந்தது.

    டிராக்டரை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில் அரசுக்கு சொந்தமான ஓடைப் பகுதியில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மணல் கடத்திய பெருமாள் கவுண்டன்பட்டியைச் சேர்ந்த மகாதேவன் (வயது 40) என்பவரை கைது செய்து டிராக்டரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×