என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கும்பகோணம் அருகே இளம்பெண் தற்கொலை
கும்பகோணம்:
கும்பகோணத்தை அடுத்த மணகுடியை சேர்ந்தவர் பாண்டியன், விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் பானுபிரியா (வயது 25).
இவருக்கு பெற்றோர் மாப்பிளை பார்த்து வந்தனர். சிலர் வந்து பெண் கேட்டும் திருமணம் நிச்சயமாகவில்லை. இதனால் பாண்டியனும், அவரது மனைவியும் வேதனை அடைந்தனர். அவர்கள் இது தொடர்பாக நேற்று இரவு பேசிக் கொண்டு இருந்தனர். அதனை பானுபிரியா கேட்டதும் தனக்கு திருமணமாகாதது பெற்றோருக்கு மிகுந்த கஷ்டத்தை கொடுப்பதாக எண்ணி மனமுடைந்தார். அவர் எலி மருந்தை தின்று விட்டு படுத்து கொண்டார். இன்று காலை பானுபிரியா எலி மருந்தை தின்றது தெரியவந்தது. அவரை கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடலை வீட்டுக்கு எடுத்து சென்றனர்.
இது பற்றிய புகாரின் பேரில் பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் அமையாததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மனகுடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்