என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லாரி மோதி விபத்து- சப்-இன்ஸ்பெக்டர் கால் துண்டானது
Byமாலை மலர்19 Nov 2018 9:56 AM GMT (Updated: 19 Nov 2018 9:56 AM GMT)
பூந்தமல்லி அருகே மோட்டார்சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் கால் துண்டானது.
பூந்தமல்லி:
பூந்தமல்லி முத்துக்குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது56). இவர் நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று காலை இவர் பூந்தமல்லி-பெங்களூர் நெடுஞ்சாலை பாப்பான் சத்திரம் பகுதியில் மோட்டார்சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அவர் சாலையை கடந்த போது காஞ்சீபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த டிப்பர் லாரி அவர் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். அவரது காலில் லாரி சக்கரம் ஏறி நசுக்கியது.
படுகாயம் அடைந்த அவரை ராமாபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரது கால் துண்டிக்கப்பட்டது.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக சங்கரன் கோவிலைச் சேர்ந்த லாரி டிரைவர் அந்தோணி கைது செய்யப்பட்டார். #tamilnews
பூந்தமல்லி முத்துக்குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது56). இவர் நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று காலை இவர் பூந்தமல்லி-பெங்களூர் நெடுஞ்சாலை பாப்பான் சத்திரம் பகுதியில் மோட்டார்சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அவர் சாலையை கடந்த போது காஞ்சீபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த டிப்பர் லாரி அவர் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். அவரது காலில் லாரி சக்கரம் ஏறி நசுக்கியது.
படுகாயம் அடைந்த அவரை ராமாபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரது கால் துண்டிக்கப்பட்டது.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக சங்கரன் கோவிலைச் சேர்ந்த லாரி டிரைவர் அந்தோணி கைது செய்யப்பட்டார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X