search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலாயுதம்பாளையத்தில் வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்தவர் கைது
    X

    வேலாயுதம்பாளையத்தில் வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்தவர் கைது

    வேலாயுதம்பாளையத்தில் காகித ஆலையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 3 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
    வேலாயுதம்பாளையம்:

    ஸ்ரீரங்கம் அருகே உள்ள குழுமணி வடக்கு மூலக்குடியைச் சேர்ந்தவர் முருகேசன் (59) இவர் தனது மகனுக்கு வேலை தேடி வந்தார். 
    இதை அறிந்த அரவக்குறிச்சி பெரிய திருமங்கலம் வடகரையைச் சேர்ந்த நல்லசுப்பிரமணியம் என்பவர் முருகேசனிடம் உங்களது மகனுக்கு புகளுரில் உள்ள செய்தித்தாள் காகித ஆலையில் வேலை வாங்கித் தருவதாக கூறி, பணம் ரூ. 3 லட்சம் வாங்கியுள்ளார். 

    ஆனால்  கூறியபடி நல்ல சுப்பிரமணியம் வேலை வாங்கி  தரவில்லை. உடனே முருகேசன் பணத்தைகேட்டார். ஆனால் நல்ல சுப்பிரமணியம் பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த முருகேசன் இது குறித்து வேலாயுதம் பாளையம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி வழக்குப்பதிவு செய்து நல்லசுப்பிரமணியை கைது செய்தனர். 
    Next Story
    ×