என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போச்சம்பள்ளியில் டிராக்டர் மோதி கூலி தொழிலாளி பலி
Byமாலை மலர்18 Nov 2018 5:06 PM GMT (Updated: 18 Nov 2018 5:06 PM GMT)
போச்சம்பள்ளியில் டிராக்டர் மோதி கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி வயது (45), கூலி தொழிலாளி. இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் வேலை காரணமாக போச்சம்பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது தருமபுரியில் இருந்து போச்சம்பள்ளி சாலையான கொள்ளம்பட்டி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது டிராக்டர் ஒன்று எடை நிலையத்தில் இருந்து எடை பார்த்துவிட்டு திருப்புவதற்காக பின்னே வந்த நிலையில் எதிர்பாராத விதமாக வீராசாமியின் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே வீராசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து டிராக்டர் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் டிராக்டர் உரிமையாளர் போச்சம்பள்ளியை அடுத்துள்ள மடத்தானூரை சேர்ந்த பாலு என தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய டிராக்டர் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X