search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரத்தில் மர்ம காய்ச்சலுக்கு 2-ம் வகுப்பு மாணவன் பலி
    X

    விழுப்புரத்தில் மர்ம காய்ச்சலுக்கு 2-ம் வகுப்பு மாணவன் பலி

    விழுப்புரத்தில் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த 2-ம் வகுப்பு மாணவன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தான்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் சாலமேடு மேற்கு தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். கூலி தொழிலாளி. இவரது மனைவி வேல்விழி. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

    3-வது மகன் யுவராஜ் (வயது 7). இவன் வி.மருதூரில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

    கடந்த புதன்கிழமை யுவராஜுக்கு திடீரென்று மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. உடனே பெற்றோர் அவனை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவனுக்கு 2 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் காய்ச்சல் அதிகரித்தது. உடனே யுவராஜை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு யுவராஜ் பரிதாபமாக இறந்தான். 

    Next Story
    ×