search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜா புயல் தாக்கிய நாகை மாவட்டத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆய்வு
    X

    கஜா புயல் தாக்கிய நாகை மாவட்டத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆய்வு

    கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் நிலைகுலைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று ஆய்வு செய்தார். #TNDeputyCM #OPanneerselvam #GajaCyclone #GajaCycloneNagapattinam
    நாகப்பட்டினம்:

    தமிழ்நாட்டின் சில மாவட்டங்களை சின்னாபின்னப்படுத்திய கஜா புயலால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. கிராமபுறங்களில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. இதனால், விவசாயிகளுடைய வாழ்வாதாரமே சீர்குலைந்து விட்டது. அவர்கள் பயிரிட்ட பயிர்கள் வாழை, தென்னை பயிர்கள் எல்லால் புயல் காற்றால் முறிந்து சேதமாகி விட்டது.

    அதை எல்லாம் கணக்கிடுகின்ற பணி நடந்து கொண்டிருக்கின்றது. இந்த புயலால் இதுவரை சுமார் 50 பேர் உயிரிழந்திருக்கின்றார்கள். அதுபோல் கால்நடைகள் ஆடு, மாடுகள் என 735 கால் நடைகளும் உயிரிழந்திருக்கின்றன.

    புயல் பாதித்த பகுதிகளை வரும் முதலைமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரும் செவ்வாய்கிழமை சென்று பார்வையிட உள்ளார்.

    இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று ஆய்வு செய்தார். இங்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பாக மாவட்ட கலெக்டருடன் ஆலோசனை நடத்திய அவர், கடுமையான சேதத்துக்குள்ளான பகுதிகளை சென்று பார்வையிட்டு வருகிறார். #TNDeputyCM #OPanneerselvam #GajaCyclone #GajaCycloneNagapattinam
    Next Story
    ×