என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தக்கலை அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி
Byமாலை மலர்17 Nov 2018 5:47 PM GMT (Updated: 17 Nov 2018 5:47 PM GMT)
தக்கலை அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண் பலியானார்.
பத்மநாபபுரம்:
குமரி மாவட்டத்தில், டெங்கு, பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க சுகாதாரதுறை ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனால், காய்ச்சல் காரணமாக நாளுக்கு நாள் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், தக்கலை அருகே மர்ம காய்ச்சலில் பெண் ஒருவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த விவரம் வருமாறு:-
தக்கலை அருகே உள்ள ஈத்தவிளை, தோட்டத்துவிளையை சேர்ந்தவர் ஈசாக். இவருடைய மனைவி செல்வி மனோகர பாய் (வயது 58). இவர் தனது மகன் ஸ்டாலின் வீட்டில் தங்கியிருந்தார். கடந்த வாரம் செல்வி மனோகரபாய் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அழகியமண்டபம், தக்கலை ஆகிய பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார். ஆனால், காய்ச்சல் குணமாகவில்லை.
இதையடுத்து மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செல்வி மனோகரபாய் பரிதாபமாக இறந்தார்.
மர்ம காய்ச்சலில் பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டத்தில், டெங்கு, பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க சுகாதாரதுறை ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனால், காய்ச்சல் காரணமாக நாளுக்கு நாள் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், தக்கலை அருகே மர்ம காய்ச்சலில் பெண் ஒருவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த விவரம் வருமாறு:-
தக்கலை அருகே உள்ள ஈத்தவிளை, தோட்டத்துவிளையை சேர்ந்தவர் ஈசாக். இவருடைய மனைவி செல்வி மனோகர பாய் (வயது 58). இவர் தனது மகன் ஸ்டாலின் வீட்டில் தங்கியிருந்தார். கடந்த வாரம் செல்வி மனோகரபாய் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அழகியமண்டபம், தக்கலை ஆகிய பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார். ஆனால், காய்ச்சல் குணமாகவில்லை.
இதையடுத்து மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செல்வி மனோகரபாய் பரிதாபமாக இறந்தார்.
மர்ம காய்ச்சலில் பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X