search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் மாவட்டத்தில் கஜா புயலுக்கு 2 பேர் பலி
    X

    திண்டுக்கல் மாவட்டத்தில் கஜா புயலுக்கு 2 பேர் பலி

    திண்டுக்கல் மாவட்டத்தை தாக்கிய கஜா புயலால் 2 பேர் பலியாகிய சம்பவம் குறித்து வருவாய் அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #GajaCyclone
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தை தாக்கிய கஜாபுயல் மிகப் பெரிய அளவில் பொருட் சேதத்தை ஏற்படுத்தியது. மேலும் உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் செரின்ராஜ் (வயது 32). இவர் துபாயில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நீலிமா (22), மகன் மாதவ் (2) ஆகியோருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். கஜாபுயல் குறித்த தகவல் அறிந்தவுடன் காரில் குடும்பத்துடன் ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். கல்லறை மேடு பகுதியில் சூறைக்காற்றில் சாய்ந்த மரம் கார் மீது முறிந்து விழுந்தது. இதில் காரில் வந்த 3 பேரும் படுகாயமடைந்து நீலிமா காருக்குள்ளேயே உயிரிழந்தார். மற்ற 2 பேரும் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஓடைப்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (65). இவர் நேற்று தனது வீட்டில் இருந்தபோது அருகில் இருந்த மரம் முறிந்து வீட்டு சுவரில் சாய்ந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் வருவாய் அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #GajaCyclone
    Next Story
    ×