search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி மரணம்- கைதான வாலிபருக்கு மருத்துவ பரிசோதனை
    X

    பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி மரணம்- கைதான வாலிபருக்கு மருத்துவ பரிசோதனை

    மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வாலிபருக்கு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. #dharmapurigirlstudent #girlmolested
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சிட்லிங் மலைகிராமாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உயிரிழந்தார்.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ரமேஷ், சதீஷ் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் காவல் துறையால் கைது செய்யப்பட்ட சதீசுக்கு மருத்துவ பரிசோதனை எடுக்க போலீசார் நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றனர்.

    இதைத்தொடர்ந்து சதீசை நேற்று தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மருத்துவ குழுவினர் செய்தனர்.

    இந்த நிலையில் மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவ குழுவினர், விசாரணை அதிகாரியான அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்து அங்குள்ள தடயங்களை ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.

    மேலும் சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் சரணடைந்த மற்றொரு குற்றவாளி ரமேஷை காவலில் எடுத்து விசாரணை செய்ய காவல் துறை திட்டமிட்டு உள்ளனர். இந்த வழக்கை சேலம் நீதிமன்றம் தருமபுரி மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு அனுப்பியவுடன் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர். #dharmapurigirlstudent #girlmolested
    Next Story
    ×