search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாலாஜா அருகே லாரி மோதி வாலிபர் பலி
    X

    வாலாஜா அருகே லாரி மோதி வாலிபர் பலி

    வாலாஜா அருகே லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா:

    பொன்னை எம்.எஸ். கண்டிகை ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 38). இவரது மனைவி சரளா (36). இவர்கள் 2 பேரும் திருவண்ணாமலை மாவட்டம் ராந்தம் கொரட்டூரில் உள்ள உறவினர்கள் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேற்று மாலை அங்கிருந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். லாலாபேட்டை நெல்லிக்குப்பம் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் ஈஸ்வரன் லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். சரஸ்வதி பலத்த காயமடைந்தார்.

    தகவலறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு, படுகாயமடைந்த சரஸ்வதியை வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×