search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னைக்கு சொகுசு காரில் மதுபாட்டில் கடத்திய திருவண்ணாமலை வாலிபர்கள் கைது
    X

    சென்னைக்கு சொகுசு காரில் மதுபாட்டில் கடத்திய திருவண்ணாமலை வாலிபர்கள் கைது

    புதுவையில் இருந்து சென்னைக்கு சொகுசு காரில் மதுபாட்டில் கடத்திய திருவண்ணாமலையை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    சேதராப்பட்டு:

    கோட்டக்குப்பம் மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனுவாசன் மற்றும் போலீசார் கோட்டக்குப்பம் மதுவிலக்கு சோதனை சாவடியில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது புதுவையில் இருந்து சென்னை நோக்கி சென்ற சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அந்த காரில் 12 அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்கள் இருந்ததை கண்டனர். மொத்தம் அந்த அட்டை பெட்டிகளில் 630 குவார்ட்டர் பிராந்தி பாட்டில்கள் இருந்தன.

    இதையடுத்து காரில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலையை சேர்ந்த ஜெயராமன் (வயது 38), கார்த்திகேயன் (34) என்பதும், இவர்கள் புதுவையில் இருந்து சென்னைக்கு மது பாட்டில்களை கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் மற்றும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×