என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் புயல் பாதிப்புகளுக்கு மத்திய அரசு போதிய நிதி அளிப்பதில்லை- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
Byமாலை மலர்17 Nov 2018 4:18 AM GMT (Updated: 17 Nov 2018 4:18 AM GMT)
தமிழகத்தில் புயல் பாதிப்புகளுக்கு மத்திய அரசு போதிய நிதி அளிப்பதில்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். #GajaCyclone #CentralGovt #MinisterDindigulSreenivasan
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் சுருட்டி வீசிய கஜா புயலுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் 81 குழுக்கள் கொண்ட அனைத்து துறையை சேர்ந்த 1110 அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கஜா புயல் காரணமாக திண்டுக்கல் நகரின் குடிநீர் ஆதாரமான ஆத்தூர் காமராஜ் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்து தற்போது 13 அடி தண்ணீர் உள்ளது.
புயல் பாதிக்கப்பட்ட பகுதியை நான் பார்வையிட உள்ளேன். ‘கஜா’ புயலை முன்னிட்டு கடலோர மாவட்டங்களில் தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
புயல் நிவாரண பணிகளை எதிர்கட்சிகள் பாராட்டியுள்ளது. பயிர்சேதங்கள் கணக்கெடுக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படும்.
தமிழகத்தில் அடுத்தடுத்து புயல் பாதிப்புகள் ஏற்பட்டபோதும் மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்குவதில்லை. மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தபோதும் தற்போது உள்ள பா.ஜனதா அரசும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்பு ரூ.5000 கோடி கேட்டால் ரூ.500 கோடியை தருகின்றனர்.
மத்திய அரசு முழு நிதியை கொடுப்பதில்லை. தமிழக அரசு நிதியில் இருந்துதான் அனைத்து நிவாரண பணிகளும் நடக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #CentralGovt #MinisterDindigulSreenivasan
திண்டுக்கல் மாவட்டத்தில் சுருட்டி வீசிய கஜா புயலுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் 81 குழுக்கள் கொண்ட அனைத்து துறையை சேர்ந்த 1110 அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கஜா புயல் காரணமாக திண்டுக்கல் நகரின் குடிநீர் ஆதாரமான ஆத்தூர் காமராஜ் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்து தற்போது 13 அடி தண்ணீர் உள்ளது.
புயல் நிவாரண பணிகளை எதிர்கட்சிகள் பாராட்டியுள்ளது. பயிர்சேதங்கள் கணக்கெடுக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படும்.
தமிழகத்தில் அடுத்தடுத்து புயல் பாதிப்புகள் ஏற்பட்டபோதும் மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்குவதில்லை. மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தபோதும் தற்போது உள்ள பா.ஜனதா அரசும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்பு ரூ.5000 கோடி கேட்டால் ரூ.500 கோடியை தருகின்றனர்.
மத்திய அரசு முழு நிதியை கொடுப்பதில்லை. தமிழக அரசு நிதியில் இருந்துதான் அனைத்து நிவாரண பணிகளும் நடக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #CentralGovt #MinisterDindigulSreenivasan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X