search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் புயல் பாதிப்புகளுக்கு மத்திய அரசு போதிய நிதி அளிப்பதில்லை- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
    X

    தமிழகத்தில் புயல் பாதிப்புகளுக்கு மத்திய அரசு போதிய நிதி அளிப்பதில்லை- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

    தமிழகத்தில் புயல் பாதிப்புகளுக்கு மத்திய அரசு போதிய நிதி அளிப்பதில்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். #GajaCyclone #CentralGovt #MinisterDindigulSreenivasan
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் சுருட்டி வீசிய கஜா புயலுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் 81 குழுக்கள் கொண்ட அனைத்து துறையை சேர்ந்த 1110 அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    கஜா புயல் காரணமாக திண்டுக்கல் நகரின் குடிநீர் ஆதாரமான ஆத்தூர் காமராஜ் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்து தற்போது 13 அடி தண்ணீர் உள்ளது.


    புயல் பாதிக்கப்பட்ட பகுதியை நான் பார்வையிட உள்ளேன். ‘கஜா’ புயலை முன்னிட்டு கடலோர மாவட்டங்களில் தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    புயல் நிவாரண பணிகளை எதிர்கட்சிகள் பாராட்டியுள்ளது. பயிர்சேதங்கள் கணக்கெடுக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படும்.

    தமிழகத்தில் அடுத்தடுத்து புயல் பாதிப்புகள் ஏற்பட்டபோதும் மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்குவதில்லை. மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தபோதும் தற்போது உள்ள பா.ஜனதா அரசும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்பு ரூ.5000 கோடி கேட்டால் ரூ.500 கோடியை தருகின்றனர்.

    மத்திய அரசு முழு நிதியை கொடுப்பதில்லை. தமிழக அரசு நிதியில் இருந்துதான் அனைத்து நிவாரண பணிகளும் நடக்கின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.  #GajaCyclone #CentralGovt #MinisterDindigulSreenivasan
    Next Story
    ×