search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நத்தம் பகுதியில் பலத்த மழை- மின்சாரம் துண்டிப்பு
    X

    நத்தம் பகுதியில் பலத்த மழை- மின்சாரம் துண்டிப்பு

    நத்தம் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. #gajacyclone #heavyrain

    நத்தம்:

    கஜா புயலின் தாக்கத்தைத் தொடர்ந்து நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பரளி, வத்திபட்டி, உலுப்பகுடி, கோவில்பட்டி, ஊராளிபட்டி, லிங்கவாடி, குட்டுப்பட்டி, சமுத்திராபட்டி,சிறுகுடி, செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை 3 மணி முதல் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நத்தம் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. காற்றுடன் மழை நீடித்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. #gajacyclone #heavyrain

    Next Story
    ×