search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புளியங்குடி அருகே வி‌ஷம் குடித்து பெண் தற்கொலை
    X

    புளியங்குடி அருகே வி‌ஷம் குடித்து பெண் தற்கொலை

    புளியங்குடி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    புளியங்குடி:

    புளியங்குடி அருகே உள்ள வெள்ளானை கோட்டை தெற்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது 60). இவரது மனைவி திருமலை(50). மோகன்தாஸ் அந்த பகுதியில் வைக்கோல் வியாபாரம் செய்து வருகிறார். திருமலை வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

    பல இடங்களில் வைத்தியம் பார்த்தும் நோய் குணமாகவில்லையாம். இந்த நிலையில் சம்பவத்தன்று மோகன்தாஸ் வைக்கோல் வாங்குவதற்காக வெளியூர் சென்றார். வீட்டில் இருந்த திருமலை திடீரென வி‌ஷத்தை குடித்து விட்டார்.

    உடனே அவரை புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வழியிலேயே திருமலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×