search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தருமபுரி அருகே தொழிலாளியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை
    X

    தருமபுரி அருகே தொழிலாளியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை

    தருமபுரி அருகே தொழிலாளியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் சோலைக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. கல்குவாரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி (வயது 35). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் லட்சுமி சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். 

    இந்த சம்பவம் குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×