search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடவாசல் அருகே தென்னை மரம் விழுந்த அதிர்ச்சியில் முதியவர் பலி
    X

    குடவாசல் அருகே தென்னை மரம் விழுந்த அதிர்ச்சியில் முதியவர் பலி

    குடவாசல் அருகே தென்னை மரம் விழுந்த அதிர்ச்சியில் முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மூலங்குடி பண்டாரஓடையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 72). இவர் கஜா புயல் எச்சரிக்கை காரணமாக வெளியில் செல்லாமல் வீட்டில் இருந்தார். நேற்று இரவு புயல் காரணமாக சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    அப்போது வீட்டின் முன்பு நின்ற தென்னை மரம் முறிந்து வீட்டின் மீது விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராமகிருஷ்ணனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி குடவாசல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×