search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் அருகே வைரஸ் காய்ச்சலுக்கு விவசாயி பலி
    X

    திருப்பூர் அருகே வைரஸ் காய்ச்சலுக்கு விவசாயி பலி

    திருப்பூர் அருகே வைரஸ் காய்ச்சலுக்கு விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை:

    திருப்பூர் மாவட்டங்களில் பன்றி, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு கடந்த 2 மாதத்தில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இந்தநிலையில் திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காட்டை சேர்ந்த கிருஷ்ணராஜ் (வயது 58). விவசாயி. இவர் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சலால் அவதிபட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

    ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. இதனையடுத்து கிருஷ்ணராஜ் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு கிருஷ்ணராஜ் பரிதாபமாக இறந்தார்.

    Next Story
    ×