என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் போலீஸ் போல் நடித்து 8 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்16 Nov 2018 11:40 AM GMT (Updated: 16 Nov 2018 11:40 AM GMT)
போலீஸ்காரர்கள் போல் பேசி மூதாட்டியிடம் 8 பவுன் நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை:
மதுரை சுப்பிரமணியபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வசந்தநகரைச் சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி பஞ்சவர்ணம் (வயது 62). இவர் நேற்று மாலை வெளியே சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது டிப் டாப் ஆசாமிகள் 3 பேர் அவரை மறித்து தங்களை போலீஸ்காரர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். இந்தப்பகுதியில் திருட்டு அதிகமாக நடக்கிறது. எனவே நகையை அணிந்து செல்லாதீர்கள் எனக்கூறியுள்ளனர்.
மேலும் பஞ்சவர்ணத்திடம் நகையை கொடுங்கள், பேப்பரில் வைத்து மடித்து தருகிறோம் என்று கூறியுள்ளனர்.
இதை நம்பிய பஞ்சவர்ணம் தன்னிடம் இருந்த 8 பவுன் நகையை கழற்றிக் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்ட அவர்கள் நைசாக நகைக்கு பதிலாக கற்களை பேப்பரில் மடித்து வைத்து அவரிடம் கொடுத்துச் சென்றனர்.
வீட்டுக்கு வந்த பஞ்சவர்ணம் பேப்பரை திறந்து பார்த்தபோது அதில் கூழாங்கற்கள் இருந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை சுப்பிரமணியபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வசந்தநகரைச் சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி பஞ்சவர்ணம் (வயது 62). இவர் நேற்று மாலை வெளியே சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது டிப் டாப் ஆசாமிகள் 3 பேர் அவரை மறித்து தங்களை போலீஸ்காரர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். இந்தப்பகுதியில் திருட்டு அதிகமாக நடக்கிறது. எனவே நகையை அணிந்து செல்லாதீர்கள் எனக்கூறியுள்ளனர்.
மேலும் பஞ்சவர்ணத்திடம் நகையை கொடுங்கள், பேப்பரில் வைத்து மடித்து தருகிறோம் என்று கூறியுள்ளனர்.
இதை நம்பிய பஞ்சவர்ணம் தன்னிடம் இருந்த 8 பவுன் நகையை கழற்றிக் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்ட அவர்கள் நைசாக நகைக்கு பதிலாக கற்களை பேப்பரில் மடித்து வைத்து அவரிடம் கொடுத்துச் சென்றனர்.
வீட்டுக்கு வந்த பஞ்சவர்ணம் பேப்பரை திறந்து பார்த்தபோது அதில் கூழாங்கற்கள் இருந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X