என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துவரங்குறிச்சி அருகே பைக் விபத்தில் வாலிபர் பலி
Byமாலை மலர்15 Nov 2018 4:42 PM GMT (Updated: 15 Nov 2018 4:42 PM GMT)
துவரங்குறிச்சி அருகே இன்று காலை பைக் விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மணப்பாறை:
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள விஷ்ணம்பேட்டையை சேர்ந்தவர் ஆரோக்கிய சுரேஷ் (வயது 28). இவரது நண்பர் பவளமங்கலம் பகுதியை சேர்ந்த சரவணன் (30).
இருவரும் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே மேனி வயல் பகுதியில் இன்று காலை சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த ஆரோக்கிய சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சரவணனுக்கு காயம் ஏற்பட்டது.
இது குறித்து அறிந்த துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து காயமடைந்த சரவணனை மீட்டு சிகிச்சைக்காக மருத்து மனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து எப்படி நடந்தது? என்பது தெரியவில்லை. வேறு ஏதேனும் வாகனம் பைக் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டதா? அல்லது சென்டர் மீடியனில் பைக் மோதி விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X