என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயங்கொண்டம் அருகே இளம்பெண் தீயில் கருகி பலி
Byமாலை மலர்14 Nov 2018 2:55 PM GMT (Updated: 14 Nov 2018 2:55 PM GMT)
ஜெயங்கொண்டம் அருகே இளம்பெண் தீயில் கருகி பலியானார். இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூரை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மகள் மீனா (வயது23). இவர் அருகில் உள்ள மேலூர் கிராமத்தில் தபால் ஊழியராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு கடந்த 8-ம் தேதி அன்று உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் அன்று அதிகாலையில் எழுந்து அடுப்பு அருகே குளிர் காய்ந்து கொண்டிருந்தார். அப்போது அசதியில் தன்னையறியாமல் அப்படியே தூங்கி விட்டார். இதனால் அடுப்பு தீ அவரது சேலையில் பிடித்து எரிந்தது. உடனே தீயின் வெப்பம் தாங்க முடியாமல் மீனா அலறினார்.
உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீனா மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் சிகிச் சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத் துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி மீனா நேற்று இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X