search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மல்லூர் அருகே தாய் திட்டியதால் 6-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி
    X

    மல்லூர் அருகே தாய் திட்டியதால் 6-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி

    மல்லூர் அருகே பள்ளிக்கு செல்ல மறுத்த 6-ம் வகுப்பு மாணவியை தாய் திட்டியதால் மனம் உடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள அக்கறைபாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் சரண்யா (வயது 12). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் பள்ளிக்கு செல்ல சரண்யா மறுத்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தாய் கண்டித்தார். மனம் உடைந்த சரண்யா வீட்டில் இருந்த சாணிபவுடரை கலக்கி குடித்து மயங்கி விழுந்தார்.

    இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×