search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தியால்பேட்டையில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை
    X

    முத்தியால்பேட்டையில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை

    முத்தியால்பேட்டையில் பிறந்த நாளுக்கு பெற்றோர் புத்தாடை வாங்கி தராததால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால் பேட்டை செயின்ட் சீமோன் பேட் காரல் மார்க்ஸ் தெருவை சேர்ந்தவர் விஜயபாலன் மீனவர். இவரது மகள் ராகினி (வயது 17). இவர் பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்ததால் தையல் பயிற்சிக்கு சென்று வந்தார். இடையில் தையல் பயிற்சிக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    கடந்த 10-ந் தேதி பிறந்த நாளையொட்டி ராகினி தனது பெற்றோரிடம் புத்தாடை வாங்கி தரும்படி கேட்டார்.

    ஆனால், அதற்கு பெற்றோர் தீபாவளி பண்டிகைக்கு 5 புத்தாடைகள் வாங்கி தந்ததால் அதில் ஒன்றை பிறந்த நாளுக்கு அணிந்து கொள்ளும்படி கூறினர்.

    இதையடுத்து பெற்றோரிடம் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாட வேண்டும் என்று ராகினி வலியுறுத்தினார். அதற்கு பெற்றோர் அடுத்த வருடம் கேக் வெட்டி கொண்டாடலாம் என்று பெற்றோர் தட்டிக் கழித்ததாக கூறப்படுகிறது.

    மேலும் நேற்று ராகினியின் அண்ணன் விஜயராஜிக்கு புத்தாடை வாங்க பெற்றோர் பணம் கொடுத்தனர். இதனால் விரக்தி அடைந்த ராகினி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    நேற்று இரவு வீட்டின் பின்பக்கத்தில் குளியல் அறையில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்கினார். அப்போது எதேச்சையாக ராகினியின் தாய் ஹேமமாலினி குளியல் அறைக்கு வந்த போது அங்கு மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அலறினார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து ராகினியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ராகினி வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் முத்தியால் பேட்டை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ரமேஷ், உதவி சப்-இன்ஸ்பெக்டர் முருகையன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×