search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜபாளையத்தில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தல் - 3 பேர் கைது
    X

    ராஜபாளையத்தில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தல் - 3 பேர் கைது

    ராஜபாளையத்தில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தளவாய்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காஜா மைதீன் மற்றும் போலீசார் அசையாமணி விலக்கு பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது 4 மோட்டார் சைக்கிள்கள் வந்தன. அதில் சாக்கு மூடைகள் இருந்தன. எனவே சந்தேகத்தின் அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    அப்போது ஒருவர் மோட்டார் சைக்கிளில் நிற்காமல் சென்று விட்டார். மற்ற 3 பேரையும், 3 மோட்டார் சைக்கிள் களையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அனுமதியின்றி மோட்டார் சைக்கிள்களில் மணல் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மணல் மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும் முத்துச்சாமிபுரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ் ணன் (வயது 43), மூர்த்தி (43), மற்றொரு ராதாகிருஷ்ணன் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய கருப்பசாமி என்பரை தேடி வருகின் றனர்.

    Next Story
    ×