search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சி அருகே செல்போன் திருட முயன்ற வாலிபர் கைது
    X

    பொள்ளாச்சி அருகே செல்போன் திருட முயன்ற வாலிபர் கைது

    பொள்ளாச்சி அருகே செல்போன் திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    கோவை:

    பொள்ளாச்சி அருகே உள்ள மலையாண்டி பட்டிணத்தை சேர்ந்தவர் தண்டபானி (வயது 63). ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தார். அப்போது இவருடைய ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான செல்போனை வாலிபர் ஒருவர் ஜன்னல் வழியாக கையை விட்டு திருடி தப்பிச் செல்ல முயன்றார்.

    இதனை பார்த்த தண்டபானி திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து கோட்டூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் திண்டுக்கல் மாவட்டம் மரியநாதபுரத்தை சேர்ந்த ஆலன்ஜேம்ஸ் (20) என்பது தெரிய வந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×