என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொள்ளாச்சி அருகே செல்போன் திருட முயன்ற வாலிபர் கைது
Byமாலை மலர்13 Nov 2018 12:05 PM GMT (Updated: 13 Nov 2018 12:05 PM GMT)
பொள்ளாச்சி அருகே செல்போன் திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை:
பொள்ளாச்சி அருகே உள்ள மலையாண்டி பட்டிணத்தை சேர்ந்தவர் தண்டபானி (வயது 63). ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தார். அப்போது இவருடைய ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான செல்போனை வாலிபர் ஒருவர் ஜன்னல் வழியாக கையை விட்டு திருடி தப்பிச் செல்ல முயன்றார்.
இதனை பார்த்த தண்டபானி திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து கோட்டூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் திண்டுக்கல் மாவட்டம் மரியநாதபுரத்தை சேர்ந்த ஆலன்ஜேம்ஸ் (20) என்பது தெரிய வந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X