search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சி அருகே விவசாயி தற்கொலை
    X

    பொள்ளாச்சி அருகே விவசாயி தற்கொலை

    பொள்ளாச்சி அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டி. நல்லிகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் மணி (வயது 50). விவசாயி. இவரது மகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டார். இதனால் மணி மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள வேப்பமரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடடினயாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட மணியின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×