search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆம்பூர் அருகே பள்ளி மாணவி தற்கொலை
    X

    ஆம்பூர் அருகே பள்ளி மாணவி தற்கொலை

    ஆம்பூர் அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த நரியாம்பட்டு பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் குப்பன். இவரது மனைவி ரஜினா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சுசிலா (வயது 14). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பும், அவரது தங்கை சுஸ்மிதா (12). 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மாலை சகோதரிகள் 2 பேரும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு திடீரென கைகலப்பாக மாறியது.

    இதனை கண்ட ரஜினா, சுசிலாவை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சுசிலா வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவலறிந்த உமராபாத் போலீசார் உடலை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×