என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காரியாபட்டி அருகே விவசாயி எரித்துக் கொலை - மனைவி கைது
காரியாபட்டி:
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள மாந்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் வீரபத்திரன் (வயது 60), விவசாயி. இவரது மனைவி மகாலட்சுமி (55).
இன்று காலை காட்டுப்பகுயில் முட்புதற்களுக்கிடையில் வீரபத்திரன் தலையில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார். மேலும் அவரது உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்தது.
இதை பார்த்த அப்பகுதியினர் உடனே மல்லாங் கிணறு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீரபத்திரன் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக வீரபத்திரனின் மனைவி மகாலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
இதனால் அவர் மீது சந்தேகம் வலுத்தது. இதையடுத்து போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தியதில் கணவரை கொலை செய்ததை மகாலட்சுமி ஒப்புக்கொண்டார். குடும்ப பிரச்சினை காரணமாக கணவர் அடிக்கடி துன்புறுத்தியதால் கொலை செய்ததாக மகாலட்சுமி வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்