என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெரம்பூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
பெரம்பூர்:
பெரம்பூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து செம்பியம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் மலைவேல் மற்றும் போலீசார் பெரம்பூர் பாலத்தின் கீழ் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் பெயர் பரத் (19), காமேஸ்வரன் (21) என்பது தெரிய வந்தது.
அவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லை. முன்னுக்குப் பின் முரணாக பேசினார்கள். விசாரணையில் அவர்கள் கொண்டு வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின் படி மற்றொரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த மோட்டார்சைக்கிள்கள் பெரம்பூர் நியூ சின்னையா காலனியைச் சேர்ந்த மோகனசுந்தரம், வியாசர்பாடி ரேணுகா அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் ஆகியோரிடம் திருடப்பட்டவை என்பது தெரிய வந்தது. அவற்றை எப்படி திருடினார்கள் என்பதையும் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான பரத் ஓட்டேரி சேமாத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர். மிண்ட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவருடன் கைதான காமேஸ்வரன் ஜமாலியா ஈ.எஸ்.ஐ. கார்டனைச் சேர்ந்தவர். 2 பேரும் கூட்டு சேர்ந்து மோட்டார்சைக்கிள்களை திருடி உள்ளனர்.
வேறு இடங்களிலும் மோட்டார் சைக்கிள் திருடினார்களா? வேறு யாருடனும் தொடர்பு உண்டா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்