search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்போரூர் தொகுதி இடைதேர்தல்: அதிமுக-திமுக ஒரே நாளில் ஆலோசனை
    X

    திருப்போரூர் தொகுதி இடைதேர்தல்: அதிமுக-திமுக ஒரே நாளில் ஆலோசனை

    திருப்போரூர் தொகுதியை கைப்பற்ற அ.தி.மு.க., தி.மு.க., டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன. #DMK #ADMK

    திருப்போரூர்:

    டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்களான தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் திருப்போரூர் தொகுதியை சேர்ந்த கோதண்டபானியும் ஒருவர். எனவே திருப்போரூர் தொகுதிக்கும் விரைவில் இடைத்தேர்தல் வருகிறது.

    திருப்போரூர் தொகுதியை கைப்பற்ற அ.தி.மு.க., தி.மு.க., டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன.

    இடைத்தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே அரசியல் கட்சியினர் களத்தில் இறங்கி விட்டனர். அவர்கள் திருப்போரூர் தொகுதியில் முகாமிட்டு ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    திருப்போரூர் தொகுதிக்கு அ.தி.மு.க.சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த தொகுதியை மீண்டும் தக்கவைக்க அவர் நிர்வாகிகளுடன் ஆலோசனைகளை நடத்தி வருகிறார். கடந்த வாரம் கட்சி பொறுப்பாளர்களை அழைத்து அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் பல்வேறு வியூகங்களையும், ஆலோசனைகளையும் வழங்கியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் திருப்போரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு அனைத்து பூத்துக்கும் பொறுப்பாளர்களை நியமித்து தொகுதியை தக்கவைக்க பல்வேறு ஆலாசனைகளை வழங்கினார்.

    இதில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, காஞ்சி எம்.பி மரகதம்குமரவேல் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் குமரவேல் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் காலையில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றதை போல் மாலையில் வேறொரு தனியார் மண்டபத்தில் தி.மு.க. சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.

    இதில் கடந்த தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதை நினைவு படுத்தினார். இடைத் தேர்தலில் திருப்போரூர் தொகுதியை திமுக கைப்பற்ற வேண்டும் என கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    இதில் பூத் பொறுப்பாளர்கள் மற்றும் வார்டு பொறுப்பாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

    இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன், காஞ்சீபுரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் வைதியலிங்கம், கே.பி.பி.சாமி எம்.எல்.ஏ., தாயகம் கவி எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ராஜா, இ.கருணாநிதி, எஸ்.அரவிந்த் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் இதயவர்மன், சேகர், கலந்து கொண்டனர்.

    இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு தினகரன் ஆதரவாளரும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ கோதண்டபாணி தலைமையில் அவருடைய இல்லத்தில் இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றியசெயலாளர் முனுசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே அரசியல் கட்சியினர் திருப்போரூர் தொகுதியை தக்கவைத்துக் கொள்ள இப்போதே போட்டி போட்டு இறங்கிவிட்டதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. #DMK #ADMK

    Next Story
    ×