என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
விருதுநகர்-சிவகங்கை-மதுரையில் பன்றி காய்ச்சலுக்கு வியாபாரி உள்பட 4 பேர் பலி
காரியாபட்டி:
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அண்ணாநகர் வீதியைச் சேர்ந்தவர் ஜோசப் (வயது 62) வியாபாரி. கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், அதற்கான சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஜோசப்புக்கு பன்றி காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது.
இதற்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று ஜோசப் பரிதாபமாக இறந்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டையைச் சேர்ந்த கார்த்திகை செல்வம் மகன் யோகேஸ்வரன் (வயது 18). விருதுநகரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த இவர், காய்ச்சலால் அவதிப்பட்டார்.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபோது பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவன் யோகேஸ்வரன் இறந்தார்.
மதுரை அரசு ஆஸ்பத் திரியில் இதுவரை பன்றி காய்ச்சலுக்கு மட்டும் 16 பேர் பலியாகி உள்ளனர். இது தவிர, வைரஸ் காய்ச்சலுக்கு 121 பேரும், பன்றி காய்ச்சலுக்கு 4 குழந்தைகள் உள்பட 21 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்த பால் ராஜ் மனைவி ஜீவா (48) என்பவரும் பன்றி காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார்.
சிவகங்கை பாரதியார் நகரைச் சேர்ந்த ஜெகநாதன் (60) என்பவரும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, பரிதாபமாக இறந்தார். #Swineflu #Dengue
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்