search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5 கி.மீ. வேகத்தில் நகரும் கஜா, அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் - வானிலை மையம்
    X

    5 கி.மீ. வேகத்தில் நகரும் கஜா, அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் - வானிலை மையம்

    வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் ஐந்து கிலோ மீட்டர் என குறைந்த வேகத்தில் நகர்கிறது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #GajaCyclone #GajaStorm
    வங்கக்கடலில் கஜா புயல் உருவாகியுள்ளது. 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் இந்த புயல் கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் கடலூருக்கும் - பாம்பனுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டது.



    இந்நிலையில் இன்று காலை இந்திய வானிலை மையம், ‘‘கஜா புயல் 5 கிலோ மீட்டர் என குறைந்த வேகத்தில் நகர்கிறது. சென்னையில் இருந்து கிழக்கே 750 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையில் இருந்து வடகிழக்கே 840 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. மேற்கு - தென்மேற்கு நோக்கி நகரும் கஜா, 15-ந்தேதி அதிதீவிர புயலாக வலுப்பெற்று பாம்பன் - கடலூர் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது’’ என்று தெரிவித்துள்ளது.  #GajaCyclone #GajaStorm
    Next Story
    ×