என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடுமலை அருகே மொபட் மீது லாரி மோதி விபத்து - தம்பதி பலி
Byமாலை மலர்12 Nov 2018 5:47 PM GMT (Updated: 12 Nov 2018 5:47 PM GMT)
உடுமலை அருகே மொபட் மீது லாரி மோதியதில் கணவன்-மனைவி பரிதாபமாக இறந்தார்கள்.
உடுமலை:
உடுமலை அருகே மொபட் மீது லாரி மோதியதில் கணவன்-மனைவி பரிதாபமாக இறந்தார்கள்.
இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
உடுமலையை அடுத்துள்ள விளாமரத்துப்பட்டியை சேர்ந்தவர் வீரன்(வயது 55). கூலித்தொழிலாளி. இவரது மனைவி காளியம்மாள் (50). இவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் இரவு உறவினரின் காதணி விழாவிற்கு செல்வதற்காக மொபட்டில் உடுமலைக்கு வந்து கொண்டிருந்தனர்.
உடுமலை- பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் ராகல்பாவி பிரிவு அருகே வந்துகொண்டிருந்தபோது அவர்களுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு லாரி வீரன் ஓட்டிச்சென்ற மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்தகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர் இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து உடுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரியை போலீசார் தேடி வருகின்றனர்.
உடுமலை அருகே மொபட் மீது லாரி மோதியதில் கணவன்-மனைவி பரிதாபமாக இறந்தார்கள்.
இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
உடுமலையை அடுத்துள்ள விளாமரத்துப்பட்டியை சேர்ந்தவர் வீரன்(வயது 55). கூலித்தொழிலாளி. இவரது மனைவி காளியம்மாள் (50). இவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் இரவு உறவினரின் காதணி விழாவிற்கு செல்வதற்காக மொபட்டில் உடுமலைக்கு வந்து கொண்டிருந்தனர்.
உடுமலை- பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் ராகல்பாவி பிரிவு அருகே வந்துகொண்டிருந்தபோது அவர்களுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு லாரி வீரன் ஓட்டிச்சென்ற மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்தகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர் இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து உடுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரியை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X