search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏர்வாடி அருகே இளம்பெண் திடீர் மாயம்
    X

    ஏர்வாடி அருகே இளம்பெண் திடீர் மாயம்

    ஏர்வாடி அருகே இளம்பெண் திடீரென மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    களக்காடு:

    ஏர்வாடி அருகே உள்ள தளபதிசமுத்திரம் மேலூரை சேர்ந்த தச்சு தொழிலாளி இருதயராஜ். இவரது மனைவி அருணா (வயது29). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 7 வயதில் மகனும், 5 வயதில் மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 10-ந் தேதி இரவு அருணா திடீரென மாயமானார். அவரை கணவர் இருதயராஜ் உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மனைவியை தேடினார். ஆனால் அவர் கிடைக்க வில்லை. ஆகவே தனது மனைவி மாயமானது குறித்து ஏர்வாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிந்து மாயமான அருணாவை தேடி வருகிறார்.

    Next Story
    ×